தினம் ஒரு திருமந்திரம்

பாடல் 39: பாயிரம் - 1. கடவுள் வாழ்த்து

வாழ்த்தவல் லார்மனத் துள்ளுறு சோதியைத்
தீர்த்தனை அங்கே திளைக்கின்ற தேவனை
ஏத்தியும் எம்பெரு மான்என் றிறைஞ்சியும்
ஆத்தம்செய் தீசன் அருள்பெற லாமே.

விளக்கம்:

இறைவனின் எல்லையற்ற குணங்களை உணர்ந்து புகழ்ந்து போற்றக்கூடியவர்களின் மனதின் உள்ளே ஜோதியாய் பரவி இருப்பவனும் அடியவர் உள்ளத்தையே கோயிலாக கொண்டு அங்கே பெருமகிழ்வோடு வீற்றிருக்கும் எம்பெருமான் சதாசிவமூர்த்தியை போற்றியும் புகழ்ந்தும் எம்பெருமான் என்று உரக்க அவன் நாமத்தை கூறியும் அன்போடு இருந்தால் அவனின் அருளைப் பெறலாம்.

Popular posts from this blog

TNPSC TEST BATCH

DAILY CURRENT AFFAIRS

DAILY CURRENT AFFAIRS

DAILY CURRENT AFFAIRS