தினம் ஒரு திருமந்திரம்

பாடல் 38: பாயிரம் - 1. கடவுள் வாழ்த்து

பிதற்றொழி யேன்பெரி யான்அரி யானைப்
பிதற்றொழி யேன்பிற வாஉரு வானைப்
பிதற்றொழி யேன்ளங்கள் பேர்நந்தி தன்னைப்
பிதற்றொழி யேன்பெரு மைத்தவன் நானே.

விளக்கம்:

அனைத்தையும் விட பெரியவனும் கிடைப்பதற்கு மிகவும் அரிதானவனும் பிறவியே இல்லாமல் உருவானவனும் நந்தி என்ற பெயரில் எமக்குள் குருவாக வந்து இருப்பவனும் பெருமை மிக்க தவத்தின் பலனாக கிடைப்பவனுமாகிய சதாசிவமூர்த்தியின் மேல் யான் கொண்ட தீராத அன்பினால் அவனின் பெருமைகளையும் புகழ்களையும் எப்போதும் ஓயாமல் சொல்லிக்கொண்டே இருப்பேன் யான்.

Popular posts from this blog

TNPSC TEST BATCH

DAILY CURRENT AFFAIRS

DAILY CURRENT AFFAIRS

DAILY CURRENT AFFAIRS