தினம் ஒரு திருமந்திரம்

பாடல் 3 : பாயிரம் - 1. கடவுள் வாழ்த்து

ஒக்கநின் றானை உலப்பிலி தேவர்கள்
நக்கனென் றேத்திடு நாதனை நாள்தொறும்
பக்கநின் றார்அறி யாத பரமனைப்
புக்குநின் றுன்னியான் போற்றிசெய் வேனே.

விளக்கம்:

அனைத்து உயிர்களுடனும் கலந்திருக்கும் இறைவனை, எண்ணிலடங்காத தேவர்கள் தினந்தோறும் போற்றித் தொழுகின்ற இறைவனை, தத்துவங்களைக் கடந்து அனைத்திற்கும் தலைவனாக இருக்கும் இறைவனை, பக்கத்தில் இருந்தாலும் அறிந்துகொள்ள முடியாத இறைவனை, யாம் அவனுள் அடங்கி நின்று, அவனைத் தியானித்து, அவன் புகழைப் போற்றி உரைப்போம்.


Popular posts from this blog

TNPSC TEST BATCH

DAILY CURRENT AFFAIRS

DAILY CURRENT AFFAIRS

DAILY CURRENT AFFAIRS